Archive | ஓகஸ்ட் 4, 2010

.புள்ளி


செந்தமிழ் ஈழம் எரிகிறதே-என

செந்தணல் மூட்டிய செல்வர்களும்
பைந்தமிழ் மானம் காத்திடவே
பசியினை மறந்த மைந்தர்களும்
பொன் தமிழ் ஆகினர்

செந்தணல் மூண்டு
எரிந்தது ஈழம்

முள்ளி முடிந்தது
முட்கம்பியோ தொடர்கிறது…..
பள்ளி படிக்கும் வயதில்
கையினில் தட்டேந்தி
கிள்ளி எடுக்கும் வெய்யிலில்
காலகடுக்கக் காத்திருப்பு!

உணர்வுகளை இயக்கி
உன்மைகளைக் கண்போம்-என
ஓட்டுக்களை வாங்கினர்
எமக்குத் தின்ன வழியில்லை
யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை

மறுப்பு ஒரு தேர்தல் அறிவிப்பு
வேளாமை விதைப்புக்கு
தயாராக்கப்படுகிறது
வாக்குறுதிகள்
தெரு ஓரம் மட்டும்
வெறிச்சோடியே கிடக்கிறது